search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குன்றத்தூர் கொள்ளை"

    குன்றத்தூர் மற்றும் வியாசர்பாடி பகுதியில் செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    குன்றத்தூர் பகுதியில் அடிக்கடி செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து குன்றத்தூர்- வண்டலூர்- மீஞ்சூர் உள்ளிட்ட சாலையில் குன்றத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் வழிப்பறி திருடர்கள் என்றும் பல இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    அவர்கள் சென்னை நந்தம் பாக்கம் பெரியார் நகரை சேர்ந்த அருண் (20), யோகலிங்கம் (28) ஆவர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வியாசர்பாடி, முல்லை நகர் பஸ் நிலையம் அருகே எம்.கே.பி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அவர், வியசார்பாடி தாமோதரன் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பதும், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
    ×